“தொடரும் பங்களிப்புகள்” Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 240 000 வருடம். இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
Author: hinducollege chava (hinducollege chava)
2014 யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயம்
யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திற்கு TOSHIBA E-Studio 2007 நிழற்பட இயந்திரம் திரு. சு. கிருஷ்ணகுமார் (வலயக்கல்வி அதிகாரி) தலமையில் அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா – 155 680
10 வது ஆண்டு விழா
எமது ஒன்றியத்தின் “10 வது ஆண்டு விழா” 24. 10. 2014 வெள்ளி மாலை 18:00 மணி “Engel Paradis Oslo” வில் நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
2014 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
“தொடரும் பங்களிப்புகள்”. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.
2013 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 01.11.2013 முதல் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள் இரு மாணவர்கள் நியமனம் செய்தனர். கல்லூரியில் உயர்தரபரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இம் மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாதாந்தம் தலா ஜந்தாயிரம் ரூபா ஊதியமாக வழங்கபடுகின்றது. இத்திட்டத்திற்கு 2011ல் சிற்றுண்டிச்சாலைக்கு வைப்பு செய்யப்பட்ட பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்பட்டுவருகின்றது. இலங்கை ரூபா 20 000.
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஆரம்பம்
“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” வறுமை கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தில் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தை” 2013 ல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரின் ஆதரவுடன் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களுடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. திட்டம் உருவானவிதம். 2010 ம் ஆண்டு முதல் நோர்வே, மற்றும் கனடாவில் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினரால் உருவாக்கப்பட்ட இத்திட்டம், இத்திட்டத்தால் பல மாணவர்கள்...
2013 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது ஒன்றியம் தென்மராட்சியில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, புலம் பெயர்ந்து வாழும் உதவிமனப்பான்மையுள்ள குடும்பத்தினர்களிடம் / நபர்களிடம் இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றோம். 2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை...
2011 – கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலம்.
கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலத்துக்கு டுப்ளோ போட்டோ பிரதி இயந்திரம் அன்பளிப்பு செய்யப்பட்டது. இத்திட்டதால் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்தை சுற்றியுள்ள 7 பாடசாலைகள் பயனடைகின்றது. அப்பாடசாலைகள் 1) யா/ உசன் இராமநாதன் மகா வித்தியாலயம். 2) யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம். 3) யா/ கெற்பேலி அ.த.க. பாடசாலை. 4) யா/ போக்கட்டி றோ.க.த.க. பாடசாலை. 5) யா/ போக்கட்டி அ.த.க. பாடசாலை. 6) யா/ மிருசுவில் றோ.க.த.க. பாடசாலை. 7) யா/ கச்சாய் அ.த.க. பாடசாலை. மிகுதிப்பணத்தில் மதில்...
கலைமாலை 2011
எமது ஒன்றியத்தின் “கலைமாலை 2011” 07. 05. 2011 சனிக்கிழமை மாலை 18:00 மணி Grorud Samfunn hus நடக்கவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
2010 சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட ஆரம்ப நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 75 000 திட்ட மதிப்பீடு கிட்டத்தட்ட 10 லட்சம்.