“மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில் – கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 22 மாணவர்களுக்கு June 2015 முதல் மாதம் தலா 2500 ரூபா வழங்கப்படுகின்றது. இத்திட்டத்திற்கு Norway...
Category: Our Projects
2014 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
“தொடரும் பங்களிப்புகள்” Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை சேர்ந்த 4 குடும்பத்தினர் கச்சாய் பகுதியிலுள்ள 8 மாணவர்களின் கல்விக்கு பண உதவி செய்துவருகின்றனர். மாதம் தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. 240 000 வருடம். இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது.
2014 யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயம்
யா/ மந்துவில் ஸ்ரீபாரதி வித்தியாலயத்திற்கு TOSHIBA E-Studio 2007 நிழற்பட இயந்திரம் திரு. சு. கிருஷ்ணகுமார் (வலயக்கல்வி அதிகாரி) தலமையில் அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா – 155 680
2014 யா/ மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயம்.
யா/ மந்துவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயத்திற்கு TOSHIBA E-Studio 2007 நிழற்பட இயந்திரம் திரு. சு. கிருஷ்ணகுமார் (வலயக்கல்வி அதிகாரி) தலமையில் அன்பளிப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா – 155 680
2014 யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
“தொடரும் பங்களிப்புகள்”. யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு விஞ்ஞான ஆய்வுகூட உதவியாளர்களுக்கான வேதனமாக இலங்கை ரூபா 120 000 வருடம் வழங்கப்பட்டது. இத்திட்டம் 01.11.2013 முதல் நடைமுறையில் உள்ளது.
2013 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி.
யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி 01.11.2013 முதல் விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கு உதவியாளர்கள் இரு மாணவர்கள் நியமனம் செய்தனர். கல்லூரியில் உயர்தரபரீட்சை எழுதி பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் இம் மாணவர்களுக்கு அவர்களுடைய எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு மாதாந்தம் தலா ஜந்தாயிரம் ரூபா ஊதியமாக வழங்கபடுகின்றது. இத்திட்டத்திற்கு 2011ல் சிற்றுண்டிச்சாலைக்கு வைப்பு செய்யப்பட்ட பணத்திலிருந்து ஊதியம் வழங்கப்பட்டுவருகின்றது. இலங்கை ரூபா 20 000.
2013 – யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை.
யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் மற்றும் பூங்கா அமைக்கப்பட்டது. தென்மராட்சி வலயகல்வி பொறுப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களால் திறந்துவைககப்பட்டது. இலங்கை ரூபா 300 000.
2013 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்.
இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது ஒன்றியம் தென்மராட்சியில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, புலம் பெயர்ந்து வாழும் உதவிமனப்பான்மையுள்ள குடும்பத்தினர்களிடம் / நபர்களிடம் இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து கொடுக்கின்றோம். 2013 ம் ஆண்டு முதல் Norway யிலும் மற்றும் Canada விலும் வசிக்கும் இலங்கை மற்றும் இந்தியாவை...
2012 – எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால்
எம்முடன் எவரும் உதவி கேட்டு தொடர்பு கொள்ளாத காரணத்தால் எம்மால் எந்த திட்டமும் செயற்படுத்தமுடியவில்லை என மனம் வருந்துகின்றோம்.
2011 – யா/ சாவகச்சேரி இந்துக்கல்லூரி
சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு சிற்றுண்டிச்சாலை கட்ட மிகுதி நிதியாக வங்கியில் வைப்பு செய்யப்பட்டது. இலங்கை ரூபா 750 000. மொத்தமாக வைப்பு செய்யப்பட்ட தொகை இலங்கை ரூபா 825 000. சிற்றுண்டிச்சாலையை பல காரணங்களால் எம்மால் பூர்த்திசெய்ய முடியவில்லை.