2021 – யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயம்

யா/ விடத்தற்பளை கமலாசனி வித்தியாலயத்தின் கோரிக்கைகளிலிருந்து மாணவர்களின் கல்விக்கு பயனளிக்கும் முக்கிய தேவையாக இருந்த Smart class room ற்கு தேவைப்படும் 40 வைத்து எழுதும் வசதியுடைய வேம்பு மரத்தால் செய்யப்பட்ட கதிரைகளை கொள்வனவு செய்து வழங்கியுள்ளோம். இத்திட்டத்தின் மூலம் பல மாணவர்கள் ஒரே நேரத்தில் கலந்து கொள்ளக்கூடிய வசதியையும், Smart class room பயன்பாட்டையும் அதிகரித்துள்ளது கூறிப்பிடத்தக்கது. பெறுமதி 205 000 இலங்கை ரூபா.

2021ல் “தொடரும் பங்களிப்புகள்”   “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” 

2021ல் “தொடரும் பங்களிப்புகள்” தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது. யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 21 மாணவர்களுக்கு 630 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2015...

2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள்.

எமது ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தின்”  ஊடாக உதவி பெறும் மாணவர்களின் 2020 க. பொ. த. சாதாரணதரப் பரீச்சை பெறுபேறுகள். கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் மாணவர்கள்  – ரஞ்சன்குமார் துவாரகன் – 9 A (அதி திறமைச்சித்தி) விமலதாஸ் திருசிகா – A, B, 3C, 3S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை) கிளி /விடத்தற்பளை கமலாசினி வித்தியாலயத்தின் மாணவர்கள் – நகுலேஸ்வரன் லக்சனா – 5A, B, C, S (நடைமுறை தேர்வு (Practical exam) முடிவுகள் வரவில்லை)...

எதிர் கால திட்டங்கள்.

ஒன்றியத்திக்கு கிடைக்கப்பெற்ற உதவிக்கோரிக்கைகள். – யா/ கைதடி சேதுகாவலர் வித்தியாலயம் குடிநீர் வடிகட்டி வழங்கும் இயந்திர தேவைக்கான கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கைதடி பகுதி நீர் உப்பு செறிவு கூடியது என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்த ஒன்றியம் முடிவு எடுத்துள்ளது. இதற்க்கான மதிப்பீட்டு விலையை பாடசாலையிடமிருந்து ஒன்றியம் கோரியுள்ளது. 2. – 2013 ல் ஒன்றியத்தால் நிறைவேற்றப்பட்ட யா/ கச்சாய் அ. த. க. பாடசாலை ஆரம்ப பிரிவுமாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்தை புனர் அமைத்து தரும்படி பாடசாலை நிர்வாகத்தினர் கோரியுள்ளனர். புனர் அமைப்பதற்க்கு தேவையான தகவல்களையும், மதிப்பீட்டு...

2021 – கைதடி நுணாவில் அ.த.க. பாடசாலை.

எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” ஏழாவது(7) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது” – கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையின் தாய் தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களையும் எமது ஒன்றியம் புலம் பெயர்ந்து வாழ்பவர்களின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்திகொடுத்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் 5 மாணவர்களுக்கு  சித்திரை 2021மாதம் முதல், மாதம் தலா ரூபா 2500 வழங்கப்படுகின்றது.   112 500 இலங்கை ரூபா வழங்கப்பட்டது.

ஓன்றியத்தின் ”மாணவர்களின் கல்விக்கான பணஉதவித்திட்டம்” ஏழாவது(7) பாடசாலைக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கைதடி நுணாவில் அ.த.க பாடசாலையில் தாய், தந்தையரை இழந்து தவிக்கின்ற மாணவர்களையும், பெற்றோர்/பாதுகாவலர் இருந்தும் வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை, எமது ஒன்றியம் புலம்பெயர்ந்து வாழும் நலன்விரும்பிகளின் உதவியுடன் இம்மாணவர்களுக்கான கல்விக்கான பணஉதவிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செயற்படுத்தி கொடுத்துள்ளது. பாடசாலை அதிபர் திரு. அ. தங்கவேலு அவர்களின் தலைமையில், பொறுப்பாசிரியர் திருமதி. க. ஸர்மினி, மாணவர்கள், பெற்றோர் முன்னிலையில் இத் திட்டம் 24. 04. 2021 ஆரம்பித்துவைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் ஐந்து (5) மாணவர்களுக்கு  சித்திரை மாதம் (April) 2021 முதல், மாதம்...

2021 – கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாம்.

கிளி/ பூநகரி ஶ்ரீ விக்னேஸ்வர மகா வித்யாலயாத்தின் அத்தியாவசிய தேவையாக இருந்த நிழற்படஇயந்திரம்(Copy machine) கொள்வனவு செய்து வழங்கியுள்ளோம். பெறுமதி 220 000 இலங்கை ரூபா. உலகளாவிய கொரோனா பேரிடர் காலகட்டத்தில் கற்றல் கற்பித்தல் போன்றவற்றை இலகுபடுத்த இச்சாதனம் பேருதவியாக உள்ளதென அப்பாடசாலை சமூகம் தமது நன்றியறிதலை தெரிவித்துள்ளது. எமது தாயக உறவுகள் தொடர்ச்சியாக பலவிதமான நெருக்கடி நிறைந்த வாழ்க்கைச்சூழலையே சந்தித்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். பல்வேறு தேவைகள் பூர்த்தியாகாமல் இருந்தாலும் மாணவர்களின் கல்விவளர்ச்சியையே கூர்ந்து கவனித்தும் அதையொட்டி உதவுவதிலுமே ஒன்றியம் மிகுந்த...

2020 மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

“தொடரும் பங்களிப்புகள்”  மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம் தாய், தந்தையரை இழந்தோர், மற்றும் பெற்றோர் / பாதுகாவலர் இருந்தும் வறுமைகோட்டினுள் தவிக்கின்ற கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களை எமது “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டத்தில்” இணைத்து மாதாந்தம் கல்வி செலவீனத்திற்கு தலா 2500 இலங்கை ரூபா வழங்கப்படுகின்றது யா/ கச்சாய் பகுதியை சேர்ந்த 1 மாணவனுக்கு 30 000 இலங்கை ரூபா வழங்கப்பட்டது. இத்திட்டம் 2013 ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கிளி/ பூநகரி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 19 மாணவர்களுக்கு 570 000 இலங்கை...

மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்

நோர்வே – யா / சாவகச்சேரி இந்துக்கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் “மாணவர்களின் கல்விக்கான பண உதவித்திட்டம்” இலங்கையில் நீடித்த யுத்ததின் காரணமாக தாய் தந்தையரை இழந்த மாணவர்களுக்கும், வறுமைக்கோட்டினுள் தவிக்கின்ற, கல்வியில் ஆர்வமுடைய மாணவர்களுக்கும், எமது ஒன்றியம் தாயகத்தில் உள்ள சில பாடசாலைகளின் அதிபர்களின் / நிர்வாகத்தினரின் உதவியுடன் மாணவர்களை தெரிவு செய்து, தாயகத்திற்கு வெளியில் வசிக்கும் குடும்பத்தினர்களிடம் / தனி நபர்களிடம் இந்த மாணவர்களின் கல்விக்கான பண உதவிகளை வழங்குவதற்கான எற்பாடுகளை செய்து கொடுத்துவருகின்றது. 2013ம் ஆண்டு – நோர்வே, மற்றும்...